தனுசு - குரு பெயர்ச்சிப் பலன்கள்

0
தனுசு - குரு பெயர்ச்சிப் பலன்கள்

தன்னலம் கருதாமல் பிறர்நலம் கருதும் தன்னம்பிக்கை நிறைந்த தனுசுராசி அன்பர்களே... இதுவரை உங்கள் இரண்டாம் வீட்டில் அமர்ந்து நற்பலன்களை வழங்கிக்கொண்டிருந்த குருபகவான் வரும் 13.11.2021 முதல் மூன்றாம் இடமான கும்பத்துக்குப் பெயர்ச்சியாக 13.4.2022 வரை சஞ்சரிக்க இருக்கிறார். உங்களின் சுகஸ்தானமான மீன ராசிக்கு அதிபதி குருபகவான். அவர் இப்போது மூன்றாம் வீட்டில் சென்று மறைவது அத்தனை நல்ல பலன்களைத் தராது. கொஞ்சம் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டிய காலகட்டம் எனலாம்.

இந்தக் காலகட்டத்தில் பிறர் சொல்வதை நம்பி ஒரு காரியத்தில் இறங்கக் கூடாது. ஆசை வார்த்தைகளுக்கு மயங்க வேண்டாம். குடும்பத்துக்குள் தேவையற்ற சச்சரவுகள் ஏற்படும் என்பதால் முடிந்தவரை விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. சகோதர உறவுகளுடன் பேசும்போது கொஞ்சம் பதற்றம் இல்லாமல் பேசவும். தேவையற்ற உரசல்கள் வந்துபோகும்.

பொதுவாக குருபகவான் ஸ்தானபலத்தால் நற்பலன்கள் தராதபோது தன் பார்வை பலத்தால் நல்ல பலன்களை வாரி வழங்குவார். உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டை குருபகவான் பார்ப்பதால் மறைந்திருந்த உங்கள் திறமைகள் வெளிப்படும். முக்கியஸ்தர்களின் அறிமுகம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையிடம் நீங்கள் காட்டும் அன்பு ஒன்றுக்குப் பத்தாகத் திரும்பிக் கிடைக்கும்.

குருபகவானின் பார்வை ஒன்பதாம் வீட்டின் மீது படுவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். கொடுத்துத் திரும்ப வராத கடன்கள் வசூலாகும். நீங்கள் வாங்கியிருந்த கடனை திரும்பச் செலுத்துவீர்கள். குடும்பத்தில் தந்தையுடன் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். மகன் அல்லது மகளுக்கு எதிர்பார்த்த கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கும். அவர்களின் திருமணமுயற்சிகளும் பலிதமாகும். நண்பர்கள் பணம் கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். கொடுப்பதற்கு முன் வாழ்க்கைத் துணையோடு ஆலோசித்துச் செய்யுங்கள்.

குருபகவான் 11ம் வீட்டைப் பார்ப்பதால் செயல்கள் தடையின்றி நிறைவேறும். பாராட்டுகள் குவியும். மூத்த சகோதரர் உதவுவார். சொத்துப் பிரச்சனைகள் சுமுகமாக முடியும். அரசியல்வாதிகள் மேலிடத்தை அனுசரித்துப் போவது அவசியம். பயணத்தின் போதும் கூடுதல் கவனம் தேவை.

குருபகவானின் சஞ்சார பலன்கள்:

13.11.2021 முதல் 30.12.2021 வரை

குருபகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் செல்வதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உருவாகும். புதிய சொத்துகள் வாங்குவீர்கள். பழைய கடன் பிரச்னைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் நற்பெயர் ஏற்படும். வீட்டில் சுபகாரியங்கள் நிகழும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு கூடிவரும்.

31.12.2021 முதல் 02.03.2022 வரை

சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலகட்டத்தில் புகழ், கௌரவம், சொல்வாக்கு, செல்வாக்கு உயரும். பிதுர்வழி சொத்துகள் கைக்கு வரும். வழக்கு சாதகமாகும். வேற்றுமதத்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் உதவிக் கிடைக்கும்.

02.03.2022 முதல் 13.04.2022 வரை

குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இந்தக் காலகட்டத்தில் நற்பலன்களே மிகுதியாக நடக்கும். வீடுகட்டும் வேலையை எடுத்துச் செய்வீர்கள். இழந்த பணம் திரும்பக் கிடைக்கும். முடிக்கமுடியாமல் இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாகும். தடைப்பட்டுக்கொண்டிருந்த சுபகாரியங்களை மகிழ்ச்சியாக செய்துமுடிப்பீர்கள். தாய்க்கு ஏற்பட்டிருந்த ஆரோக்கிய குறைவுகள் நீங்கும். புதிய வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு:

புதிய முதலீடுகள் விஷயத்தில் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டுச் செய்யவேண்டாம். சந்தை நிலவரத்தை கவனத்தில் கொள்ளுங்கள். தேங்கிக் கிடந்த சரக்குகளைப் போராடி விற்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் அன்போடு நடதுகொள்ளுங்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்களிடம் கராராகப் பேசவேண்டாம். ஸ்டேஷ்னரி, ஹோட்டல், விடுதிகள், கமிசன் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

பணியிடத்தில் தேவையற்ற பேச்சுகளைத் தவிருங்கள். மேலதிகாரியோடு விவாதம் செய்வதை விட்டுவிடுங்கள். முக்கிய பொறுப்புகள் தேடிவரும். எனவே நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருங்கள். யாரேனும் உங்களை மட்டம் தட்டிப் பேசினால் பதில் சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள். இடமாற்றங்கள் வந்தால் அதிர்ச்சி அடைய வேண்டாம். வேலைச்சுமை படிப்படியாகக் குறையும். அடிக்கடி விடுப்பு எடுப்பதைக் குறையுங்கள். பணி தொடர்பான வழக்குகள் கொஞ்சம் நிதானமாகச் செல்லும். பதற்றம் வேண்டாம். அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டாம்.

கலைஞர்களே! பெரிய வாய்ப்புக்காக காத்திருக்காமால் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி வேலைச்சுமை, அலைச்சல்,சிறுசிறு ஏமாற்றங்களை தந்தாலும், உங்களை பக்குவப்படுத்தி வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம்

காஞ்சிபுரத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ ஏகாம்பரநாதேஸ்வரரை வணங்குங்கள். மனவளம் குன்றியோருக்கு உதவுங்கள். தடைகள் நீங்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top